Thursday, July 2, 2020

சுயேட்சை குழு! ஒரு ஆசனத்தை பெறுவது எவ்வாறு?

"நீங்கள் 40000-45000 வாக்குகளை வைத்து ஒருவரை எவ்வாறு பாராளுமன்றம் அனுப்புவீர்கள்?" என்று சிலர் கேட்கின்றனர்.
கடந்த ஆக்கத்தில் நாம் கூறியது போல, கண்டியிலிருந்து 3 ஆசனங்களை பெறுவதற்கான ஒரு வியூகமே (சுயேட்சை - 1, ஐ.தே.க - 2) வகுக்கப்பட்டிருந்தது. 2000 ஆண்டு தேர்தல் முடிவு அதற்கு நல்ல உதாரணம் என்பதையும் தெளிவுப்படுத்தியிருந்தேன்.
ஆனால், இன்று நிலமை தலைகீழாக மாறிவிட்டது. ஐ.தே.க. இரண்டாகப் பிரிந்திருக்கின்றது. இரு பக்கமும் முஸ்லிம்கள் வேட்பாளா்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இது ஆபத்தான நிலையாகும். இதனால் முஸ்லிம் வாக்குகள் சிதறுகின்ற நிலமை தோன்றும்.